ஞானத்தின் படிகள்

கிடைத்த வாழ்வே சாலச் சிறந்தது என்று உணர்வதே ஞானத்தின் முதல் படி!
இரண்டாம் படி மனிதம்!
மூன்றாம் படி அனைத்துயிரிடம் அன்பு!
நான்காம் படி வாழ்வின் நிலையாமையை உணர்தல்!
ஐந்தாம் படி மனமடங்குதல்!
ஆறாம் படி நாம் இறைவனின் அங்கம் என்ற அனுபவம் பெறுதல்!
ஏழாம்படி உலகனைத்தும் இறைவனால் நிரம்பிய (தன்னையும் சேர்த்து) நிலையில் நிலைத்தல்!
ஒரு படி ஏற அடுத்தபடி தெளிவாய்த் தெரியும். அதுவரை தெரியாது. மூடு பனியில் மாடிப் படி ஏறுவது போல!