நம் மனத்தின் தூய்மைக்குத் தகுந்த குருவே நமக்குத் தோன்றுவார். மக்கள் தின வழிபாடுகள் ஏதோ கீழானது. பெரிய மந்த்ரோபதேசம் தேவை என்று தவறாகப் புரிந்து கொண்டு குருக்களைத் தேடிப் போகிறார்கள்.
மேலும் உலக இன்பதுன்பங்களில் உதவி பெறவே குருக்களைத் தேடுகிறார்கள். தினமும் செய்யும் மூவேளை வழிபாடுகளால் நம் மனது தூய்மையாக தூய்மையாக சத்குரு நமக்குத் தோன்றுவார்.
பால்காரர் வரும் முன் நாம் செய்ய வேண்டியது பால்வாங்கும் பாத்திரத்தை நன்றாக கழுவித் தேய்த்து உலர்த்தி வைக்க வேண்டும். அதுவே தின வழிபாடும் நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் தரும் பலன்.
பாத்திரம் கழுவி இருந்தால் பால்காரர் தேடி வந்து பால் ஊற்றுவார். அவரே குரு.
நாமோ பால் பாத்திரத்தைத் தேய்க்காமல் தெருத்தெருவாய் பால்காரரைத் தேடி அலைகிறோம். பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பால் திரிந்துவிடுகிறது.
அதாவது அன்றாட வாழ்விற்கான வேண்டுதல்களையே குருவிடம் வைக்கிறோம். காலப்போக்கில் அப்படிப்பெற்ற அனைத்தும் அழிந்து போகிறது.
குறை நம்மிடமே இருக்கிறது!
#போலிகுருக்கள்நமக்குஅமைவதேன்