குடுமி வைத்தவர்கள்

பலரும் குடுமி வைத்த அந்தணர் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் வேதம் ஓதும் அந்தணர் என்றால் ஒரு இளக்காரம் .
அவர்களது பின்னணியை அறிந்தால் அவர்கள் சாதாரணர்கள் அல்ல என்பதை உணர்வீர்கள்.

கிட்டத்தட்ட 70-75 வருடங்களாக காஞ்சி மஹாப் பெரியவர் வேண்டு கோளுக்கு இணங்க அந்தணக் குடும்பங்களில் ஒரு மகனை வேதத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அந்தணக் குடும்பங்களால் வேதத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள்.

அவர்களது குடும்பங்களில் மற்ற ஆண்கள் மிகப் பெரிய பதவிகளில், ஐஏஎஸ்,ஐபிஎஸ்,டாக்டர்கள்,இஞ்சினியர்கள்,CEOக்கள்,…… இருப்பார்கள்.

அதனால் உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அரசியலுக்காக அவர்களின் பொருளாதார சுகங்களை விட்ட தியாகத்தை இழிவாகப் பேசலாம். ஆனால் அது பண்பு இல்லை.

சீக்கியர்கள் உருவானது ஒவ்வொரு இந்துக் குடும்பமும் தலை மகனை இந்துமதம் காக்க அர்ப்பணிக்கப் பட்டதாலேயே. மற்றவர்கள் அனைவரும் சாதாரண இந்துக்கள் அணியும் உடைகள் பழக்க வழக்கங்கள் உடையவர்களே. இதைத் தனிப் பதிவாக பார்ப்போம்!

தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் இன்றைய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இருவரும் காஞ்சி மஹாப் பெரியவரின் வேண்டுகோளுக்கு பணிந்து அவரவர் பெற்றோரால் வேதப்பணிக்கு அர்ப்பணம் செய்யப் பட்டவர்களே!

மேலும் இந்துக்கள் அனைவரும் குடுமி வைத்திருந்தவர்களே!

பூணல் ஒழுக்கம்,அறிவைக் குறிக்கும். குடுமி ஞானத்தைக் குறிக்கும் – திரு மூலர்

நம் தலையாய மதமாற்றம் சனாதனம் ஒழிக்கும் முயற்சிகள் தொடர்க. ஆனால் யாரைப் பற்றி என்ன பேசுகிறோம் என்ற அடிப்படை அறிவு முக்கியம்!

#அந்தணர்கள்

மகான்கள் நோயிலிருந்து காப்பார்களா?!

ஷீரடியில் காலரா வந்த போது பாபா எக்கச்சக்கமாக கோதுமையை அரைத்தார். பெண்களும் உதவி செய்து உழைப்பிற்குத் தகுந்த அளவு கூடையில் மாவை நிரப்பி எடுத்துச் செல்ல நினைத்தனர். பாபாவுக்கு வந்ததே கோபம் ” உங்க அப்பன் வீட்டுச் சொத்தா என்று சாடினார்!” பெண்கள் கூடையைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினார்கள்.

பாபா அவர்களைக் கூப்பிட்டு இந்த மாவு அனைத்தையும் ஊரியின் எல்லையைச் சுற்றி தூவச் சொன்னார். காலரா ஊரை நெருங்கவில்லை. அவர் அரைத்தது கிருமிகளை.

பல அற்புதங்களைச் செய்யும் மகான்கள் இன்றும் இந்தியாவில் உண்டு.

குகைகளை விட்டு வெளிவராமலும் தங்களை வெளிப்படுத்தாமலும் நம்மை காக்கிறார்கள்.

வினை முடிந்த உயிர்களை காப்பதில்லை.

போர்க்காலங்களில் மகான்கள் எல்லைப்புறங்களில் காட்சி அளித்தது உண்டு பலமுறை!

காஞ்சிப் பெரியவர் ஒரு இராணுவ டாக்டர் போரில் குண்டடி பட்டபோது தோன்றி அவரது உதவியாளரிடம் அந்த டாக்டரைக் தூக்கிக் கொண்டு ஓடச் சொன்னார்!

பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக காஞ்சிப் பெரியவரை சந்திக்க வந்தபோது ” குண்டடி பட்டதே! தேறிவிட்டாய்!” என்றார் பெரியவர். ” ஆமாம் ஸ்வாமி! என் உதவியாளர் ஏதோ ஒரு சந்யாஸி என்னைத் தூக்கிக் கொண்டு ஓடச் சொன்னதாகச் சொன்னார். எனக்கு அப்போது புரியவில்லை!” என்று கண் கலங்கி வணங்கினார்!

மகள் கேட்ட கேள்வி!

“நீங்கள் எப்போதும் காஞ்சிப் பெரியவர் காஞ்சிப் பெரியவர் என்று சொல்கிறீர்கள். அவரது கதைகளைச் சொல்லாத நாளில்லை. மேலும் பலரின் கனவுகளில் அவர் இன்றும் வரும் சம்பவங்களைப் பகிர்கிறீர்கள். ஆனால் உங்கள் கனவில் ஒருமுறை கூட வரவில்லை ஏன்?!” என்றாள்.
” நல்ல கேள்வி! கனவு என்பது மனதில் ஏற்படும் நிகழ்வு. மனம் ஒரு கண்ணாடியைப் போலவே! முன்னால் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை உடைய கண்ணாடி. காஞ்சிப் பெரியவர் உலகளாவிய ஒரு தெய்வம். என் மனம் அழுக்கான கண்ணாடியைப் போல. என் மனதின் முன் அவர் இருந்தாலும் அவரது பிம்பத்தை பிரதிபலிக்கும் தன்மை இல்லை. நான் இன்னும் என் மனதை தூய்மை செய்ய வேண்டும்!” என்றேன்.

இறைவனின் ஆயிரம் நாமங்களைச் சொல்வது ஏன்?!

பலப்பல ஒலி மற்றும் அதிர்வுக்கோவைகளால் உலகையே உருவாக்கவும் மாற்றியமைக்கவும் முடியும் என்பது நமது முன்னோர்கள் கண்ட நெறி. வெறும் அதிர்வுகளை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லாமல் நம் சிற்றறிவிற்கு வசப்படுமாறு ஆயிரம் பெயர்களை உருவாக்கி அதில் இறைவனின் குணங்களை வர்ணித்தபடியும் அதிர்வுகளின் பயனையும் அடையுமாறும் எளிதில் நினைவு கொள்ளும் வண்ணத்திலும் உருவாக்கப்பட்டவையே ஆயிரம் நாமங்கள். எடுத்துக்காட்டாக விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். அவனுக்கு கோவில் கட்டி வழிபடுவது முதல் நிலை. வ ஷ ண என்ற அதிர்வுகளை மட்டும் உச்சரித்தால் பொருளும் இல்லை மனமும் சலிக்கும். இணைத்துச் சொன்னால் விஷ்ணு என ஒரு உருவம் சார்ந்த கடவுள் என பாமரர்களால் உணரமுடியும் மற்றும் அதிர்வின் பலனும் உண்டு. இந்த அதிர்வுகள் மதங்களைத் தாண்டியவை. எடுத்துக்காட்டாக நமசிவய,சிவயநம,வசியநம என்று பல வகையில் உச்சாரணம் செய்யும் முறை உண்டு. அதனால் பாமரர்களுக்கு நடராஜன் சிவன் என்ற பிம்பங்கள் தோன்றினாலும் அதிர்வுகளே அடிப்படை.
Aasha mai அவர்களின் பெற்றோர் சொன்ன மந்திரம் பொருள் மற்றும் பின்னணி இதோ!

பார்வதி தேவி சிவனைக் கேட்டாள் ” விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபட முடியாதவர்களுக்கு இலகுவாக ஒரு வழி சொல்லுங்கள்!”
அதற்கு சிவன் சொன்ன பதிலே
” ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே”
” ராம ராம என்று ஜபித்தாலே விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபட்டதற்குச் சமம்!” என்று பொருள். இது மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்துக் கொண்டு விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை தருமருக்கும் ஏனையோருக்கும் சொன்னது. இதைச் சொல்ல பீஷ்மர் ” விஷ்ணுவின் அவதாரமான கண்ணனின் முன்பு எப்படிச் சொல்வேன்!” என தயங்கினார்.கண்ணனோ உங்கள் பேரக் குழந்தைகள் உங்கள் வாய்வழி கேட்டால் நலம். கூறுங்கள்!” என கண்ணன் ஆசீர்வதிக்க சொல்லப்பட்டது விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இது முழுக்க முழுக்க அதிர்வுகள் சம்பந்தப்பட்டது. சீரடி பாபாவின் உயிர்காத்த மந்திரம் என அவர் சொல்லி இருக்கிறார். காஞ்சிப் பெரியவர் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தால் 104 டிகிரி காய்ச்சலை ஒரு மருத்துவர் முன்னிலையில் குறைத்துக் காட்டினார்! இன்னும் எவ்வளவோ சூட்சுமங்கள் உண்டு! சனிக்கிழமை தோறும் கேட்பது மரபு!

ப்ரச்சனை இல்லாத வாழ்க்கை!

நோ சான்ஸ்!
ப்ரச்சனையே இல்லாமல் மனித பிறவி எடுக்க முடியாது! காஞ்சிப் பெரியவர் ஒரு கண் பார்வை இழந்தார். ஒரு காது சரியாக கேட்க்காது. ஆனால் ஞானக் கண்ணால் அனைத்தும் அறிந்தார். காஞ்சிப் பெரியவர் நாடி ஜோதிடப்படி ஒரு வருட சிறைவாசம் இருந்தது.தன்னைத்தானே ஓராண்டு சிறைப்பிடித்தார்! விவேகானந்தர் பலப்பல வியாதிகளுக்கு உள்ளானார். நாமல்லாம் பொலம்பியே செத்துருப்போம். அவ்வளவு உடல் சுகமில்லை.இராம க்ருஷ்ணர் விலைமாதின் பாவத்தை ஏற்று தொண்டையில் புற்றுநோயால் அவஸ்தைப் பட்டு இரத்த வாந்தி எடுத்தார்! கேட்டால் உரக்கச் சிரிப்பார். உணவே விழுங்க முடியாமல் அவர் இருப்பதைப் பார்த்து  சாரதா தேவி வருந்தினார். ஏனென்றால் ” என்று உன் கையால் நான் உண்பதை நிறுத்துகிறேனோ அன்று உடலைத் துறந்துவிடுவேன்!” என்று அவர் சொல்லியிருந்தார்.
அவர்களுக்கு இது சட்டை! நமக்கு உடல் நாம்! அதுதான் துன்பம் உணர்கிறோம்.