பலரும் குடுமி வைத்த அந்தணர் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் வேதம் ஓதும் அந்தணர் என்றால் ஒரு இளக்காரம் .
அவர்களது பின்னணியை அறிந்தால் அவர்கள் சாதாரணர்கள் அல்ல என்பதை உணர்வீர்கள்.
கிட்டத்தட்ட 70-75 வருடங்களாக காஞ்சி மஹாப் பெரியவர் வேண்டு கோளுக்கு இணங்க அந்தணக் குடும்பங்களில் ஒரு மகனை வேதத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அந்தணக் குடும்பங்களால் வேதத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள்.
அவர்களது குடும்பங்களில் மற்ற ஆண்கள் மிகப் பெரிய பதவிகளில், ஐஏஎஸ்,ஐபிஎஸ்,டாக்டர்கள்,இஞ்சினியர்கள்,CEOக்கள்,…… இருப்பார்கள்.
அதனால் உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அரசியலுக்காக அவர்களின் பொருளாதார சுகங்களை விட்ட தியாகத்தை இழிவாகப் பேசலாம். ஆனால் அது பண்பு இல்லை.
சீக்கியர்கள் உருவானது ஒவ்வொரு இந்துக் குடும்பமும் தலை மகனை இந்துமதம் காக்க அர்ப்பணிக்கப் பட்டதாலேயே. மற்றவர்கள் அனைவரும் சாதாரண இந்துக்கள் அணியும் உடைகள் பழக்க வழக்கங்கள் உடையவர்களே. இதைத் தனிப் பதிவாக பார்ப்போம்!
தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் இன்றைய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இருவரும் காஞ்சி மஹாப் பெரியவரின் வேண்டுகோளுக்கு பணிந்து அவரவர் பெற்றோரால் வேதப்பணிக்கு அர்ப்பணம் செய்யப் பட்டவர்களே!
மேலும் இந்துக்கள் அனைவரும் குடுமி வைத்திருந்தவர்களே!
பூணல் ஒழுக்கம்,அறிவைக் குறிக்கும். குடுமி ஞானத்தைக் குறிக்கும் – திரு மூலர்
நம் தலையாய மதமாற்றம் சனாதனம் ஒழிக்கும் முயற்சிகள் தொடர்க. ஆனால் யாரைப் பற்றி என்ன பேசுகிறோம் என்ற அடிப்படை அறிவு முக்கியம்!
#அந்தணர்கள்