செருப்பு என் குரு!

image

செருப்பு,கட் ஷூ,ஷூ!
செருப்பு அணிவது மிக எளிது. சட்டென்று காலை நுழைத்துவிடலாம்! ஓரளவே காலுக்கு பாதுகாப்பு! காலில் அடி படலாம்! மழையில் கால்கள் நனையும்!

கட் ஷூ அணிவது அதைவிடக் கடினம் . சில சமயங்களில் காலை கொஞ்சம் நன்றாக அழுத்தி நுழைக்க வேண்டும்.ஆனால் காலுக்கு ஓரளவு பாதுகாப்பு. அடிபடாது .ஆனால் கால்கள் மழையில் நனையும். விபத்து ஏற்பட்டால் கழன்று விழுந்துவிடும்.

ஷூ அணிவதோ கடினமான செயல். லேஸைத் தளர்த்தி காலை நுழைத்து மறுபடி லேஸை இறுக்கிக் கட்ட வேண்டும். அதுவும் இரண்டு காலுக்கும் தனி கவனம் தேவை!
ஆனால் விபத்துக்கள்,மழை நீர் இவற்றிலிருந்து முற்றிலும் பாதுகாக்கும்!

தீய பழக்கங்கள் செருப்பு போல!  அதனால் தான் நம்மால் அவற்றை விட முடியவில்லை. கடைப்பிடிப்பது மிக எளிது.ஆனால் நம் பல ப்ரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்!

ஓரளவு நல்ல பழக்கங்கள் கட் ஷூ போல . ஓரளவு முயற்சி செய்தால் போதும்! கார் ஓட்டும் போது ஸிக்னல் குடுக்காமல் டர்ன் செய்வது. பார்க்கிங்கை விட்டுக் கொடுக்காமல் சண்டைக்கு நிற்பது. இப்படி சிறு முயற்சியால் திருத்த முடிந்த தீயபழக்கங்கள்!

மிக நல்ல ஒழுக்கங்கள் சீலங்கள் ஷூவை அணிவது போல. அஹிம்சை,தயை,கொடை,கருணை,வாய்மை,பிறன்மனை நோக்காமை ,புலால் தவிர்த்தல்,…. மிக மிக தளராத முயற்சி தேவை .பழகினால் இறைநிலை அடையலாம்!
இந்த உண்மை எனக்குத் தோன்றியபோது செருப்பாலடித்தது போல இருந்தது!
தீய பழக்கங்களை கடைப்பிடிக்க நினைக்கும் போது ” டேய்! செருப்பு வேணாம்! காலக் கடிக்கும்! ஷூவப் போடு!” என்று சொல்லிக் கொள்வேன்!😀😂

பஞ்சுமிட்டாய்க்காரன்!

தெருவிலே பஞ்சுமிட்டாய் வண்டி சத்தம் கேட்டது. எப்போதுமே பஞ்சுமிட்டாய் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று. எனக்கோ வியப்பைத் தருவது!
பஞ்சுமிட்டாய்க்காரர் மரநிழலில் வண்டியை நிறுத்தினார். வண்டியை நோட்டம் விட்டேன்.
நாலைந்து கண்ணாடி ஜாடிகள். இவற்றில் சீனி ,சிவப்பு,பச்சை,ஊதா வண்ணங்கள். ஒரு சுழலும் மாவாட்டும் யந்திரம் போலவும் நடுவில் ஒரு சூடாக்கும் பல ஆயிரம் துளைகள் உள்ள பாத்திரம்.
அவர் பாத்திரத்தைச் சூடாக்க நெருப்பைப் பற்றவைத்து இயந்திரத்தைச் சுழலவிட்டார். பின் ஓரளவு சூடேறியவுடன் ஒரு ஸ்பூன் சக்கரையை அதன் நடுவில் போட வெண்மேகம் போல மிட்டாய் வெளிப்படத் தொடங்க அதை குச்சியில் சுழற்றிப் பிடித்தார். வெள்ளை வெளேரென்று பஞ்சுமிட்டாய் ரெடி! பின் ஒவ்வொரு நிற பொடியையும் சீனியையும் போட்டு தனித்தனி வண்ணமாக கலவையாக இப்படி பஞ்சுமிட்டாய்களைச் செய்து பலப்பல விலங்குகள் பூக்கள் வடிவங்களில் உருமாற்றம் செய்து பைகளில் மூடிவைத்தார். பள்ளிக்கு நேரமாகவே ஓடிவிட்டேன்.
மாலையில் பள்ளி முடிந்து வீடுபோகும் வழியில் அவர் செய்த பஞ்சுமிட்டாய்கள் விற்றுவிட்டனவா என்று பார்த்தேன்.
ஓரிரண்டு விற்காமல் இருந்தன.அவரது அருகில் சென்று ” அண்ணே, விக்காத மிட்டாய என்ன பண்ணுவீங்க? !” என்று கேட்டேன்.
இருந்த மிட்டாய்களை அத்தனையையும் சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார்!
” எல்லாம் அஞ்சு ஸ்பூன் சீனிதாந்தம்பி!” என்றார்.

பஞ்சுமிட்டாய்க்காரன் – இறைவன்
சீனி – ப்ரம்மம் என்ற சச்சிதானந்த மூலப் பொருள்
சிவப்பு,பச்சை,ஊதா நிறங்கள் – சத்வ,ரஜோ,தமோ குணங்கள்
சூடும்,சுழற்சியும் – இயங்கு சக்தி,படைப்பு
பலப்பல துளைகள் – 84 இலட்ச யோனிகள்,உயிர்வகைகள்
விற்பது – வாழ்க்கை நிகழ்வுகள்
விற்காததைச் சாப்பிடுவது – ப்ரளயம்,உலகம் அழிதல்

பஞ்சுமிட்டாய்க்காரன்

தெருவிலே பஞ்சுமிட்டாய் வண்டி சத்தம் கேட்டது. எப்போதுமே பஞ்சுமிட்டாய் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று. எனக்கோ வியப்பைத் தருவது!
பஞ்சுமிட்டாய்க்காரர் மரநிழலில் வண்டியை நிறுத்தினார். வண்டியை நோட்டம் விட்டேன்.
நாலைந்து கண்ணாடி ஜாடிகள். இவற்றில் சீனி ,சிவப்பு,பச்சை,ஊதா வண்ணங்கள். ஒரு சுழலும் மாவாட்டும் யந்திரம் போலவும் நடுவில் ஒரு சூடாக்கும் பல ஆயிரம் துளைகள் உள்ள பாத்திரம்.
அவர் பாத்திரத்தைச் சூடாக்க நெருப்பைப் பற்றவைத்து இயந்திரத்தைச் சுழலவிட்டார். பின் ஓரளவு சூடேறியவுடன் ஒரு ஸ்பூன் சக்கரையை அதன் நடுவில் போட வெண்மேகம் போல மிட்டாய் வெளிப்படத் தொடங்க அதை குச்சியில் சுழற்றிப் பிடித்தார். வெள்ளை வெளேரென்று பஞ்சுமிட்டாய் ரெடி! பின் ஒவ்வொரு நிற பொடியையும் சீனியையும் போட்டு தனித்தனி வண்ணமாக கலவையாக இப்படி பஞ்சுமிட்டாய்களைச் செய்து பலப்பல விலங்குகள் பூக்கள் வடிவங்களில் உருமாற்றம் செய்து பைகளில் மூடிவைத்தார். பள்ளிக்கு நேரமாகவே ஓடிவிட்டேன்.
மாலையில் பள்ளி முடிந்து வீடுபோகும் வழியில் அவர் செய்த பஞ்சுமிட்டாய்கள் விற்றுவிட்டனவா என்று பார்த்தேன்.
ஓரிரண்டு விற்காமல் இருந்தன.அவரது அருகில் சென்று ” அண்ணே, விக்காத மிட்டாய என்ன பண்ணுவீங்க? !” என்று கேட்டேன்.
இருந்த மிட்டாய்களை அத்தனையையும் சுருட்டி வாயில் போட்டுக் கொண்டார்!
” எல்லாம் அஞ்சு ஸ்பூன் சீனிதாந்தம்பி!” என்றார்.

பஞ்சுமிட்டாய்க்காரன் – இறைவன்
சீனி – ப்ரம்மம் என்ற சச்சிதானந்த மூலப் பொருள்
சிவப்பு,பச்சை,ஊதா நிறங்கள் – சத்வ,ரஜோ,தமோ குணங்கள்
சூடும்,சுழற்சியும் – இயங்கு சக்தி,படைப்பு
பலப்பல துளைகள் – 84 இலட்ச யோனிகள்,உயிர்வகைகள்
விற்பது – வாழ்க்கை நிகழ்வுகள்
விற்காததைச் சாப்பிடுவது – ப்ரளயம்,உலகம் அழிதல்

காலன்,காமம்,கடவுள்!

காலன் பற்றுவது உடலை காமம் பற்றுவது மனத்தை! காமம் இயங்குவது உடலால்! சித்தத்தை புருவமத்தியில் நிறுத்தினால் உடல் தளை அழிகிறது! அதனால் நாம் உடலைச் சார்ந்தவர்கள் அல்ல என்ற தெளிவு பிறக்கிறது! உடல் உணர்வற்ற போது உடல் உறவு பெரிதாகப் படுவதில்லை! இதைக் குறிக்கவே சிவபெருமான் மூன்றாம் கண்ணாகிய புருவமத்தியால் காமனை எரித்தான் என்று உருவகப்படுத்திச் சொல்லப் பட்டது! உடலின்பத்தை சனாதன தர்மம் என்றுமே பழித்ததில்லை. அதைச் சிற்றின்பம் என்றார்கள். அதைவிட மிகப் பெரிய இன்பம் நம் ஐம்புலன்களைத் தாண்டி உணர முடியும்.அதைப் பேரின்பம் என்றார்கள்! சிற்றின்பத்தை அனுபவி . ஆனால் அது நிலையற்றது என்பதை உணர்.

ஆன்மீகம்-24

21April 2018
வானவில்
=========
உடல் சார்ந்த வேறுபாடுகளைக் களைந்து உள்நோக்கத் தொடங்கயிருக்கிறோம்.

நாம் யார்? உடலுக்குள் இருப்பதென்ன?
நாம் உடலில்லை என்பது நாம் இறந்த உடல்களைப் பார்த்தால் தெரிகிறது.

நாம் மூன்று வித உடல்களின் கட்டமைப்புக்குள் உள்ள ஆன்மா!

பருவுடல் அதாவது சோற்றுடல். சோறும் நீரும் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதற்கு பிறப்பு,நோய்,இறப்பு உண்டு.

நுண்ணுடல் அதாவது கண்ணிற்குப் புலப்படாத உடல். இதில் நம் உடலின் உயிரோட்டத்திற்கான ப்ராணசக்தி ஆற்றலாகச் செயல்பட்டு இந்த சோற்றுடலை இயக்குகிறது.

வினையுடல் அதாவது நம் கர்மவினைகள் அதன் பதிவுகளைத் தாங்கிய உடல். இதுவே அடுத்த பிறவி நோக்கி நம்மை நம் பழக்க வழக்கங்கள் வினைகளை எழுதா ஏடாக எடுத்துச் செல்கிறது. இதைவைத்தே நம் அடுத்த பிறவி அதைச் சார்ந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன.

இதற்குள் இருப்பதே நாம் என்ற பரம்பொருளின் தீப் பொறி!
பரம்பொருள் தீ என்றால் ஆன்மாவாகிய நாம் இந்த முவ்வுடல் சிறையில் அகப்பட்ட தீப்பொறிகளே!

நாம் கடவுள் என்ற உண்மையிலிருந்து நம்மைப் பிரித்து நாம் சாதாரண மனிதர்களே என்று நம்மை நம்பவைத்து அழியும் உலக ஆசைகளில் ஈடுபடச் செய்து உழலவைப்பது இந்த உடல் கோப்பே!

நம் எண்ணங்கள் வினைகள் ஆசைகள் வினையுடம்பில் இருக்கும் வரை நாம் பிறந்திறந்தே இருப்போம்! சுகதுக்கங்கள் மாறி மாறி வரும்!

நுண்ணுடல் பதிவுகளை முழுமையாக அழித்து நாம் கடவுளைத் தவிர்த்த யாரும் இல்லை! கடவுளேதான் என்ற அத்வைத நிலையை உணர்வதே ஆன்மீகத்தின் குறிக்கோள்!

மதங்கள் வழிகள்! ஆன்மீகம் சென்று சேருமிடம்!

Religions are paths! Spirituality ,God experience is the destination!

All religions are equally good,neither inferior nor superior!
எம்மதம் வழியாகவும் இறைநிலை அடையலாம்! இராமக்ருஷ்ண பரமஹம்ஸர் இதைச் செய்து காட்டியவர்!
(தொடர்வோம்)
#ஆன்மீகம்
#spirituality
#आत्मविचार

ஆன்மீகம்-23

14 ஏப்ரல் 2018
வானவில்
=========
“நடைமுறை ஆன்மீகம்”

உடல் சார்ந்த வேறுபாடுகளைக் களைந்து ஆன்மீகத்தின் வாசற்படியில் நிற்கிறோம்!

நிலையாமையை நித்தமும் ஒருமுறையேனும் சிந்திக்கிறோம்!

மனம்,சித்தம் அடங்குவதே ஆன்மீகத்தின் நோக்கம் என்று முழுமையாக/அரைகுறையாக நம்புகிறோம்!

ஓரளவு மனித/உயிர் நேயம் பழகுகிறோம்!

சித்தத்தின் அலைகள் ஓய்வதே யோகம் எனப் பார்த்தோம்.

நடைமுறை ஆன்மீகம் என்பது இருவழிப்பாதை !

மதங்கள் சார்ந்த பாதை! மதங்கள் சாராத பாதை!

மதங்கள் மனமடங்கும் வழிகளை பாமரரும் பயன்பெறும் வழிபாட்டு முறையாக வகுத்தன!

மதம் சாராத வழிகளான தன்னொழுக்கம்,நேர்மை,பிற உயிர்க்கு மனம் உடல் சொல்லால் தீங்கிழைக்காமை,பிறரின் துன்பம் துடைத்தல்,…. இவற்றின் மூலமும் சித்த சுத்தி அடைந்து பிறப்பிறப்பற்ற பேரானந்த நிலை அடையலாம்!

மதம் சார்ந்த வழிமுறை-1
——————————————–
காலை எழும்போதும் மதியம் மாலை இரவு தூங்கும் முன்னும் இறைவனைச் சிந்தித்தல். இன்றைவிட நாம் நாளை நல்ல எண்ணங்கள் செயல்கள் சொற்கள் உள்ளவர்களாக மாறவேண்டும் என இறைவனை வேண்டுதல்.

மதம் சாராத வழிமுறை-1
——————————————-
நான் என்னுடையது என்ற எண்ணத்தைக் களைய முயல்தல்.
வள்ளுவர் சொல்கிறார் ” கண்ணா! ஸிம்பிள் வழி! நீ தேவர்களைவிட ஒருபடி மேலே போகனும்னா உன் ஈகோ ,பொஸஸிவ்னஸை விட்டுவிடு!”

யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

மனம்,சித்தம்,புத்தி,அஹங்காரம் என்று எப்படிச் சொன்னாலும் அனைத்தும் ஒன்றையே குறிக்கும் என சென்ற பதிவில் பார்த்தோம்.

மனம் தண்ணீர். சட்டி உடல். அடுப்பு உலக வாழ்வு. எரியும் விறகுகள் – பணம்,பட்டம்,பதவி,ஆணவம்,அகம்பாவம்,பிறரைப் பழித்தல்,அழித்தல்,காழ்ப்பு,…..

விறகு எரிவதால் நீராகிய மனம் கொதிக்கிறது.
ஒன்று நம் பயன்கருதா விருப்பு வெறுப்பற்ற செயல்கள்(கர்ம யோகம்) என்ற அரிசியைக் களைந்து உலையில் போட்டால் ஞானம் சோறாகி விறகும் சாம்பலாகி எல்லாம் அமைதியாகிவிடும். அது இறைநிலை. சஹஜ ஸமாதி. செயலாற்றி செயலின்றி இருத்தல். விவேகானந்தர் போன்ற நிலை.

மற்றொன்று ஆணவம்,பணம்,பட்டம்,பதவி…. போன்ற விறகை ஒன்றொன்றாகக் களைதல் .இது ஞான யோகம். நிர்விகல்ப சமாதி என்ற உலக தோற்றமாற்றங்களே இன்றி அமையும் நிலை. இரமணமகரிஷி

இதில் நமக்கு எது ஒப்புமோ அதைப் பின்பற்றி உய்வோம்!
வன்முறை களைவோம்! நன்முறை பயில்வோம்!
(#ஆன்மீகம்)

ஆன்மீகம்-22

7 ஏப்ரல் 2018
வானவில்
=========
ஆன்மீகத்திற்கான தகுதி ,அதன் இறுதி நிலை,அதன் வழிமுறைகள் ,பாதைகள் பற்றி அறிந்தோம்.

தகுதி- உயிருடன் உடல்தாங்கி இருத்தல்

இறுதிநிலை – பிறப்பிறப்பற்ற நிலை

வழிமுறை – நிலையாமை உணர்ந்து பிறப்பிறப்பைத் தரும் ஆசை களைவதே!

பாதைகள்-நாத்திகம்,ஆத்திகம்,பக்தி,சேவை,ஞானம்,ராஜயோகம்,…இப்படிப் பல . உடலுறவு கூட ஒரு பாதை! கடினமான ஒன்று ! அதுவும் ஒரு பாதையே! விந்து வெளிப்படாத உடலுறவும் ஒரு யோகமே! நம்மால் கடைப்பிடிக்க இயலாத ஒன்றை விவாதித்து அறிந்து பயனில்லை.

ஆன்மீகத்தில் உடல் சார்ந்த அனைத்தையும் புறந்தள்ளி மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற தன்னுணர்வு ஆன்மா என்பவை பற்றியே பேச பழக ஆராய வேண்டும்!

“சாதி மத இன பால் திணை உருவமா அருவமா என்று கீழான எண்ணங்களை மறந்தும் பேச நினைக்கக் கூடாது. அது அறியாமைச் சுழலில் நம்மை பலப்பல பிறவிகளில் அதே நிலையில் நிறுத்தி வைத்து ஆன்மத் தேடலைத் தடைப்படுத்தும். சுருக்கமாக அதை மாயை எனச் சொல்லி தவிர்ப்போம்!”

இவற்றை அறிந்தபின் நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என பார்த்து வருகிறோம்!

மனதார வாழ்த்தல்,பிறர் துன்பம் களைதல்,நிலையாமையை நினைவு கூறல்,ஈகை,கருணை பழகல்.

இதனால் அடையும் பயன் மனத்தூய்மை.

மனத்தூய்மையால் அடையும் நன்மை என்ன?

மனத்தூய்மையால் அடைவது சித்தத் தூய்மை!

சித்தத் தூய்மையால் அடைவது இறையனுபவம்! 

இதுவரை சரி! மனத்திற்கும் சித்தத்திற்கும் என்ன வேறுபாடு?

கடற்கரையில் அலைகள் எழுந்து வந்தபடி கரையில் மோதியபடி இருக்கும்.
அதில் சூரிய பிம்பம் இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட நேரத்திலேயே தெரியும். அதுவும் அலைக்கழியும் நிலையற்ற பிம்பமாகவே தெரியும்!

நடுக்கடலில் சாந்தமாக அலையின்றி சூரியன் தங்கத்தட்டு போல ஒளிரும்.

கடற்கரை நீர் – மனம். ஆசை ,வெறுப்பு என்ற காற்று வீச அவற்றை அடையும் தவிர்க்கும் முயற்சியில் அலைக்கழியும்.
கடற்கரை சூரிய பிம்பம் – நம் மனதில் அவ்வப்போது வந்து போகும் இறையனுபவம் என்ற ஆனந்தம் ,அமைதி. எடுத்துக்காட்டாக தூக்கத்தில் அனுபவிக்கும் சுகமான அமைதி மனமடங்குவதால் நாம் அனுபவிக்கும் குறுகிய கால (சத் சித்) ஆனந்தமான இறையனுபவமே!

சித்தம் – அலையற்ற ஆழ்கடல் . அதில் சூரியன் ஒளிர்வதைப் போல இடையற்ற இறையனுபவத்தை அடையலாம். இதையே சமாதி நிலை என பலவாறாகச் சொல்கிறோம்.

இன்னுமொரு குறிப்பு: மனம் சித்தம் புத்தி அஹங்காரம் எல்லாமே உண்மையில் ஒன்றுதான் என்ற நுட்ப்பங்களை இப்போதைக்குத் தவிர்ப்போம். கடல்நீர்,கடற்கரை நீர்,நடுக்கடல் நீர்,அலைகள்,கடல் நுரை இவையனைத்தும் ஒன்றானாலும் நாம் பாகுபடுத்திப் பார்ப்பது போலவே இது!

யோகம் = சித்தத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்ப்பதே யோகம் – பதஞ்சலி யோக சூத்திரம்

நடைமுறை ஆன்மீகம் மன அலைகளைக் குறைத்து முடிவில் ஓரெண்ணம் கூட எழாத நிலையில் மனம் சித்தம் இவற்றிற்கும் உள்ள வேறுபாடழிந்து கடற்கரை நீரும் நடுக்கடல் நீரும் அலையற்றிருப்பது போன்ற நிலையடையும் நோக்கத்தோடே !
(தொடர்வோம்)
#ஆன்மீகம்