முடிவிலா சிந்தனைகள்

சிந்தனை குறைய வேண்டும் என்கிறார்கள். பால் பொங்கி தணிவது போல. யோக சித்த வ்ருத்தி நிரோதஹ- மனம் அடங்குவதே யோகம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். மனமடங்கக் கல்லார்க்கு வாயேன் – திருமூலர்.
மனம் கேள்வி கேட்டு கேட்டு அதற்கு முடிவில்லை என உணர்ந்து குருவை சரணடைந்து இறைநிலை அடைவது யதார்த்தம்! A simple natural process! கேள்வி கேட்க்கும் மனம் தன்னை பகுத்தறிவாளி என முட்டாள்த்தனமாக எண்ணி சிலகாலம் சந்தோஷப்படுவதும் இயற்கையே!

2,5,8,10

2 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
சினம் தவிர்த்தேன்!
5 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
மனிதனானேன்!
8 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
நல்ல மனிதனானேன்!
10 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
புனிதனானேன்!
தவறு என்ற எண்ணம்,
தவறாய் இருக்கலாம்,
எனக்கு முழு பின்னணியும் தெரியாதோ?,
நல்ல வேளை நான் வாயைத் திறக்கவில்லை!,
மற்ற கோணங்களை அறிந்தபின் இப்போது தான் உண்மை தெரிந்தது
என மனம் பயணிக்கும் காலம் 10 விநாடியே!