டெடி பேர்!

சில குழந்தைகள் டெடி பேரோடு தான் தூங்கும்!
சில இல்லாமலும் தூங்கும்!
சில தூக்கத்தில் கரடி பொம்மையை நழுவ விட்டுவிடும்!
இது எல்லாமே குழந்தைங்கதான்!

டெடி பேரோடு தூங்குவது – உருவக வழிபாடு
இல்லாமல் தூங்குவது – வழிபாடு தேவையற்றது
தூக்கத்தில் நழுவ விடுவது – உருவகம் பற்றி அருவம் அடைந்து நான் கடவுள் என அறிவது

எல்லோரும் பரம்பொருளின் பிம்பங்களே!

இதுல டென்ஷனாற மேட்டரே இல்ல!

கோழி மிதிச்சி!

நாம் பல சமயங்களில் நம் குழந்தைகளை கண்டிக்கும் போது திட்டுவோம்! உள் மனதில்  பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்ற உள்ளுணர்வோடு திட்டுவோம்!
ஓரிரு சமயங்களில் நம் உள் மனத்திலிருந்து வந்துவிடும்.
அப்போது யோசிப்பேன் ” மனசாற புள்ளய திட்டிட்டோமோ?! அடடா! இப்ப என்ன செய்ய?! வார்த்தைகள் எய்த அம்பாயிற்றே!”.
அதற்கு இரண்டு வழிகளைக் கையாளத் தொடங்கினேன்.
ஒன்று மனம் நோகச் சொல்லி இருந்தால் மன்னிப்புக் கேட்டு எந்த காரணம் என பிள்ளைக்கு விளக்குவது.
மற்றொன்று உறங்கச் செல்லும் போதும் எழுப்பும் போதும் ” நீ நன்றாக வாழ்வாய்! இறையருள் உண்டு!” என்று சொல்வது.
இதை விடாமல் கடைப் பிடிக்கிறேன். அதனால் ஒரு நிம்மதி! நல்லது செய்யும் போது தவறு ஏற்பட்டுவிடக் கூடாது!

காலம்,நேரம் உண்டானது எப்படி?

உணர்வு,அறிவு,அழிவிலாமை என்ற தன்மைகள் கொண்ட ஒரு பொருளை எண்ணிக் கொள்ளுங்கள். அது தான் “பரம்”பொருள்.
நாம் அறிந்த மற்ற அனைத்தும் “வெறும்”பொருள். ஏனென்றால் அவை அனைத்தும் அறிவு,உணர்வு அற்ற ஜடப் பொருள் மற்றும் அழியும் தன்மையுடையவை.

அப்படிப்பட்ட பரம்பொருள் எல்லாத்திசைகளிலும் நீக்கமற 360 டிகிரி நிறைந்துள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள். நம் மனம் பெயர்  உருவம் நிறமற்ற பொருட்க்களை கற்பனை செய்யும் திறமற்றது.

நமது சிற்றறிவிற்கு விளங்கும் வகையில் நாம் அந்தப் பொருளை நீர் என்று கொண்டால் ஓரளவு எளிதாக இருக்கும்.
அதாவது ஒரு அலையற்ற பெருங்கடல் என மனதில் கொள்வோம்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். இந்த நீர் உணர்வும் அறிவும் உள்ள ஒரு விசித்திரப் பொருள்.
(தொடரும்)

மனதின் அறிதிறன்(mind’s ability)

நிலையான அறிவும் உணர்வும் உள்ள பொருள்னு (சத்-நிலையான சித்-அறிவும் ஆனந்தம்-உணர்வும்) சொன்னா உலகப் பொருள் எதையுமே உதாரணம் காட்டமுடியாது. நம்ம மனசுக்கு ஒரு சொல்லைக் கேட்டதும் அதற்கு உருவம் நிறம் கொடுத்து புரிந்து கொள்ளும். யானை என்றவுடன் அதன் உருவம் மனதுக்கு பளிச்சிடும்.  நாம கேட்க்காத பார்க்காத படிக்காத பொருள் எதையுமே நம்ம மனசால புரிஞ்சிக்க முடியாது. கெமிஸ்ட்ரி படிக்காத பாமரரிடம் அஸிட்டிக் ஆஸிட்னு சொன்னா தெரியாது. அது படிச்சவன் ethyl alcohol moleculeல் COOH ன்இடம் பெயர் வினை நடப்பதால்(substitution) உருவாவது என்று குத்து மதிப்பா புரிஞ்சிக்குவான்.

சாரத்தின்(லுங்கி) சாரம்!

மனமடங்கிய சந்யாஸிக்கு,ஞானிக்கு உலகவாழ்வில் நாட்டம் சாரத்தைப் போல கழன்று விழுந்துவிடும்! ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்,சேஷாத்ரி ஸ்வாமிகள்,சதாசிவ ப்ரம்மேந்திரர்,காஞ்சிப் பெரியவர்,விவேகானந்தா…. இவர்கள் லுங்கியைப் போலவே தங்கள் உடம்பை ஆன்மா மீது இருக்கிக் கட்ட மிகவும் கஷ்டப்பட்டார்கள். உடல் உணர்வு அடிக்கடி மறந்துவிடும். நமக்காக உடலைத் தாங்கினார்கள்! விவேகானந்தா அடிக்கடி உடலைவிட நினைப்பார். ராமக்ருஷ்ணர் காட்சி அழித்து உன் வேலை முடியவில்லை என்று வலியுறுத்துவார்!

இந்துக்கள் மூவரைப் பின்பற்றுக!

(இவங்களும் இந்துதாங்க!)

ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் :
=========================

எல்லா மதங்களும் இறைவனை அடையவழிகள் என்பதை செய்து காண்பித்தவர்! சில ஆண்டுகள் இஸ்லாமியராகவே வாழ்ந்தார்! நபிகளின் தரிசனமும் அல்லாவின் இறை அனுபவமும் பெற்றார்!
கிறிஸ்தவராக சில ஆண்டுகள் வாழ்ந்தார்! சர்ச்சில் நுழைந்தவுடனே பரவசநிலை அடைந்துவிடுவார்!
இஸ்லாமியராக,கிறிஸ்தவராக வாழ்ந்த போது காளி வழிபாட்டை அறவே கைவிட்டார்!
“எம்மதமும் சம்மதம் இல்லை. எல்லா மதமும் உண்மை!” என்றார்.

விவேகானந்தர்:
===============
கடவுள் உருவமற்றவன் என்று தொடங்கி காளி தரிசனம் பெற்றவர். சேவையே சிறந்த வழிபாடு. சேவையின் மூலம் இறையுணர்வு அடையலாம் என நிரூபித்தவர்.

காஞ்சி மஹாப் பெரியவர்:
========================
துறவின் இலக்கணமாய் சாதி மத இன குல பால் நாடு வேற்றுமையைக் கடந்து வாழ்ந்து காட்டியவர்! உலக அரசாங்கங்கள் தன் காலடியில் கிடந்த போதும் அடக்கமே உருவானவராய் இருந்தார்! பிரிட்டிஷ் அரசகுடும்பம் இவரது காலடியில் கிடந்தது! எதை வேண்டுமானாலும் அவர் சாதித்துக் கொண்டிருக்கலாம்!

உறவுகள்!

ராக்கெட் சீறிப்பாயும் முன் அதன் தளைகள் நீக்கப்படும். நம் மன ,ஆன்மப் பயணம் சீர்படத் தொடங்கும் போது உறவுகள் பறிக்கப்படும். இது உலக நியதி. எந்த உறவும் எத்தனை நாள் நிலைக்கிறது ஏன் நிலைக்கிறது என்பது நம் வினைப்பயனே! ஆற்று வெள்ளம் தானே ஓடும்,ஆசை உள்ளம் சொந்தம் தேடும். மனித மனம் முதிர்ச்சி அடைய இவை வகுக்கப்பட்ட முறை. இதற்கு விதிவிலக்கில்லை!

ஷ்ரெட்டிங் மெஷின்!

வாழ்க்கை நிகழ்வுகள் எதற்கும் சம்பந்தம் கிடையாது. அதில் நாம் ஒரு தொடர்ச்சியான கதையாக அதை இதை ஒட்டவைத்து ஒரு கதையை உருவாக்கி ஒட்டவைத்து படித்து குழம்பி அங்கலாய்க்கிறோம்!
எ.கா.
பலப்பல செய்தித்தாள்களை பேப்பர்  ஷ்ரெட்டிங் மெஷினில் போட்டால் அது அதைத் துண்டு துண்டாக நீளவாக்கில் வெட்டிவிடும். பின் அந்த மெஷினைத் திறந்தால் துண்டிக்கப்பட்ட காகிதங்கள் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக ஒட்டி படித்தால் ஒரு திகில் நாவலாகவோ அர்த்தமற்ற கதையாகவோ இருக்கும்.
மனம் – ஷ்ரெட்டிங் மிஷின்
துண்டுக் காகிதங்கள் – நினைவுகள்
செய்தித் தாள்கள் – அன்றாட நிகழ்வுகள்,நாம் மனதில் வாரிப்போடும் சினிமா,நாவல்,காதல்,கத்திரிக்காய்
ஒட்டிவைத்து படிப்பது – ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்பு படுத்தி பொருள் காண முனைவது

சொல்லுமந்த்ர மேதடா?

ஹேது தற்சமமாக ஏது என்றானது.

ஹேது என்றால் உதவும் பொருள்,செயல் .

அதாவது சுற்றி வந்து சொல்லும் மந்திரம் உதவும் என்பதே உண்மை விளக்கம்.

ஏதடாவை வைத்து பலர் விளக்கினாலும் அது band aid போலவே!

நட்ட கல்லும்!

நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தவர்களுக்கு உருவச் சிலைகள் கல்லுக்குச் சமம்.

இதை காஞ்சி மஹாப் பெரியவர் பதிவில் பதிந்திருக்கிறேன்.

சித்தர்கள் சொல்வது அத்வைத நிலை. அதை அடையாமல் இந்த பாடலைச் சுட்டுவோர்கள் தங்கள் அறியாமையைக் காட்டுகிறார்கள்.

மலையில் ஏறியவனுக்கு அடிவாரத்தில் செல்லும் பேருந்து எறும்பு! அடிவாரத்தில் இருப்பவன் பேருந்தை எறும்பு என்று முன் போய் நிற்கமுடியாது!