விழித்திரு!

சகோதரி Neeraja Bathini Arunachalam  கீழ்க்கண்ட வள்ளலார் பாடலை பகிர்ந்தார்.

விழித்து விழித்திமைத்தாலும் சுடர் இலையேல் விழிகள் விழித் திளைப்பதல்லால் விளை வொன்றும் இல்லையே

கண் பார்வை அற்ற ஒருவன் எத்தனை முறை கண்ணை விழித்து விழித்துப் பார்த்தாலும் கண்ணிற்கு ஒன்றும் புலப்படாது.கண்ணிற்கு உளைச்சல் ஏற்படுவதைத் தவிர வேறு பயனில்லை!
அதைப்போல உலகின் நிலையாமை உணர்தல் என்ற விழிப்புணர்வு ஏற்படாமல் பலப்பல சடங்குகளிலும் சாத்திரங்களிலும் நேரத்தையும் செல்வத்தையும் வீணடிப்பதால் இறைநிலையை உணர முடியாது.நேரமும் செல்வமும் வாழ்வும் வீணாவதைத் தவிர வேறு பயனில்லை.

இதன் பொருள் குருவின் அருளின்றி இறைநிலை பெற இயலாது என்பதல்ல. என்று நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறதோ அன்றுதான் இறைவன் குருவை முன் நிறுத்துவான். நாம் தேடிச் சென்றடையும் குரு சத்குரு அல்ல! பக்குவம் அடையும் வரை குருவைத் தேடுதல் வீண் முயற்சியே!

Leave a comment