கோவிலில் செய்யக் கூடாதது!

கோவில் மூல விக்ரகம் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனைப் போல!  ஒரு ஓரமாக அமர்ந்து கண் மூடி உங்கள் மனதை ப்ளக் செய்யுங்கள். அங்கு ஒலி அலையும் (ப்ரார்த்தனை,அர்ச்சனை,வேண்டுதல்,தேங்காய் உடைத்தல்,அர்ச்சனைத் தட்டு மாறிய சண்டை,ஆயிரம் ரூபாய் தரிசன டிக்கட் சண்டை….) மன அலையும் (இதைக் கொடு முருகா! அதைக் கொடு முருகா என்ற மன உளைச்சல்கள்…)கூடாது.
இந்த ஒலி மற்றும் மன அலைகள் சந்நிதியில் இருக்கும் இறை உருவிலிருந்து வெளிப்படும் சக்தி வாய்ந்த அதிர்வுகளை அடைய முடியாமல் செய்யும்.
இரண்டு உதவிகள் செய்யுங்கள்:
1.பேர் சொல்லி அர்ச்சனை செய்யாதீர்கள்
.அர்ச்சனை டிக்கட்,அர்ச்சனை தட்டே வாங்காதீர்கள். பூவோ மாலையோ வாங்கவேண்டிய அவசியமும் இல்லை.
2.எதையும் வேண்டாதீர்கள்.
இதை இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்வு செழிக்கும். இது சத்தியம்.
அறிவியல் பூர்வமாக பின்னர் விளக்குகிறேன்

Leave a comment