வானவில்
=========
2 ஜூன் 2018
பாவ மன்னிப்பு சாத்தியமா?
பாவம் அல்லது புண்ணியம் = கர்மவினை
யென்று பார்த்தோம்
மேலும்
செயல்+நல்லெண்ணம்=புண்ணியம்
புண்ணியம் – தன்னலம் = பற்றாத வினை
அதாவது பலன் கருதா(பயன்தூக்கா) செயல்வினை ஆகாது.
ஒரு சிறு விளக்கம்:
=================
1.பயன்தூக்கா செயல்:
===================
பயன்தூக்கா=நிஷ்காம்ய
செயல்=கர்மம்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
நன்மை கடலிற் பெரிது ! என்னவென்றால் பிறப்பிறப்பில்லா நிலை கடலைவிட பெரியது தானே!
2.பயன் தூக்கிய செயல்:
====================
பயன்தூக்கிய=காம்ய
செயல்=கர்மம்
1.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால் – அவ்வை
அடுத்தவர்க்கு உதவிவிட்டு என்று அதன் பயன் நமக்குக் கிடைக்குமோ என அஞ்சாதே. வேரில் ஊற்றிய உப்புநீர் இளநீராக நிச்சயம் திரும்பி வரும்! இது காம்ய கர்மம்!
2.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
தீயவர்க்கு செய்த உதவியால் நீ பலனை எதிர்பார்த்தாலும் நல்வினை ஏற்படாது. ஏனென்றால் தீயவரால் நல்வினைகள் செய்யப்பட மாட்டாது!
தேவர னையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழு கலான்
தீயவருக்கு செய்த பயனாக நல்வினை ஏற்பட வாய்ப்பில்லை.தீவினை ஏற்பட வாய்ப்புண்டு!
பாவத்தை எப்படி அழிப்பது?
எழுதப்பட்ட எதுவும் அழிக்கப்படும் தன்மை உடையது.
ஒரு வினையை அழிப்பதற்கு அதன் எதிர் வினை போதுமானது.
தீவினை= வினை+தீய எண்ணம் (1)
தீவினை+நல்வினை= வினை+தீய எண்ணம்+வினை+நல்லெண்ணம்
= வினை+வினை (2)
தீவினை= -நல்வினை அதாவது மைனஸ் நல்வினை
அதனால் வினைமட்டுமே மிஞ்சும் பாவ புண்ணியம் கழிந்துவிடும்!
பாவமன்னிப்பு இந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.மன்னிப்புக் கேட்டதும் மனது ஒரு நற்செயலைச் செய்யும் மன நிலை அடைகிறது.
பரிகாரங்கள் இவ்வாறே வடிவமைக்கப்பட்டன. கஞ்சத்தனத்தால் பொய் பித்தலாட்ங்களால் வந்தவினையை நமது ஜாதகம் மூலமாகவோ அல்லது மகான்களின் ஞானத்ருஷ்டி மூலமாகவோ அறிந்து அதற்கான எதிர்வினையாக தானதர்மங்களை மன்னிப்பு கேட்டுத் திருந்தும் எண்ணத்தோடு செய்தால் பாவங்கள் மறையும்!
எடுத்துக்காட்டாக வங்காளத்தைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வரருக்கு வாயால் உணவு உண்ணமுடியாத வியாதி! உணவை வயிற்றில் வைக்கப்பட்ட துளைவழியாக வேளாவேளைக்கு ஊற்றவேண்டும்! எதையும் சுவைக்க முடியாது.
காஞ்சிப் பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டு மடத்தைச் சார்ந்த தன் நண்பரிடம் பலமுறை மன்றாடி பெரியவரிடம் அழைத்துச் செல்லச் சொன்னார். பலமுறை முயன்று பெரியவர் தரிசனம் கிடைக்க தன் நிலையைச் சொல்லி அழுதார்!
“நான் என்ன செய்ய முடியும்?! நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். பதினெட்டு புராணங்களையும் தொகுத்து அச்சடித்து பலருக்கும் விநியோகம் செய்யுங்கள்!” என்றார். அதைப்போலவே அந்த பணக்காரரும் பலவருடங்கள் முயன்று தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். வெளியிட்ட ஓரிரு தினங்களில் ஏதோ நினைவின்றி தாகத்தில் தண்ணீரைக் குடித்துவிட்டார்! அடடா! இது உயிருக்கு ஆபத்தில்லையா? என பதறினார். ஆனால் தண்ணீர் உள்ளிறங்கியது. ஒரு ப்ரச்சனையும் இல்லாமல் உணவும் இறங்கியது ! பெரியவரிடம் ஓடோடி வந்து கதறி அழுது நன்றி கூறினார்.
இதனால் நாம் அறிவது என்னவென்றால் அந்த பணக்காரர் முன் பிறவியில் புராணங்களை இழிவு படுத்தியதின் விளைவாக வந்த வியாதியை மனம் நோகாமல் புரிய வைத்து தடுத்தாட்க் கொண்டார் பெரியவர்!
நல்வழிப்படுவோம்! நல்லோர் தொடர்பால் வினை களைவோம்!
(தொடரும்)
பி.கு. வேகவேகமாக பல தத்துவங்களை படபடவென்று சொல்லிச் செல்வதால் பயனில்லை! ஆழ அகல நுண்ணிய நோக்கு தேவை என்பதால் பாவ புண்ணியம் அவற்றை நீக்கும் வழிகளை பகிர்கிறேன்!
#ஆன்மீகம்