நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.
நாம் சேற்றில் விழுந்த குழந்தை போல. தாய் கொதிக்கின்ற நீரை(தீவினை) குழந்தை மேல் ஊற்ற மாட்டாள். உடல் உறையும் அளவு குளிர்ந்த நீரையும்(புண்ணியம்) ஊற்றமாட்டாள். பதமான சூட்டிலேயே குளிப்பாட்டுவாள். குழந்தை இருந்தாலும் குளிக்க முரண்டு பிடிக்கும் . ஓடி ஒழியும். தாய் இழுத்துப் பிடிக்க வருவாள். களைத்துப் போய் “டேய்! தம்பிய தூக்கிட்டுவாங்கடா !” என்று மூத்த பையனை(சுற்றம்) மகளை(உறவு) ஏவுவாள். அவர்கள் குழந்தையைப் பிடித்து வருவார்கள்(உறவு நட்பால் வரும் தொல்லை). குழந்தை அவர்களை அடிக்கும்(உறவுக்கும் நட்புக்கும் நாம் தரும் எதிர்வினை)நம் எதிர்வினை . கடிக்கும். ” அம்மா! பாப்பா கடிச்சி வைக்குது!” என்று முறையிடுவார்கள். அம்மா சிரிப்பாள். என் மார்பையே பாலூட்டும்(இறைவன் இல்லை என்று கூறுவது) போது கடிப்பவள் தானே என்று எண்ணி. இதுதான் தெளிவு.
இது தெரிந்தால் பகைவனிடமும் ஏமாற்றுக்காரனிடமும் கருணை அன்பு பெருகும்.
எல்லாம் ஒரு விளையாட்டே இந்த உடம்பு உள்ளவரையில்.
பிறகு அடுத்த உடம்பு .அடுத்த உறவு நட்பு. தொடரும் கர்மவினைகள். சுகம் துக்கம் ஏமாற்றம் சண்டை பெருமிதம் ஆணவம்….. என்று நகரும் வாழ்க்கைகளின் முடிவிலாச் சங்கிலி.
” என் தம்பி துரோகம் பண்ணிட்டான்!
மச்சான் பழிவாங்கிட்டான்!
அப்பா கைவிட்டுட்டார்!
சகோதரி க்ராதகி!” என்று அங்கலாய்ப்பது நேர விரயமே!. அவரவர் விதிவசம்,அவரவர் அனுபவம்!
நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.
பொருட்காட்சியில் ராட்டினத்தை இயக்குபவர்(இறைவன்) யோசிப்பார் ” இப்படி மேலும் கீழும் போவதில் என்ன ஆனந்தமோ?! மக்கள் காசு(கர்ம வினை) கொடுத்து வரிசையில் முட்டிமோதி ராட்டினத்தில்(வாழ்க்கை) ஏறுகிறார்கள். காசில்லாதவன்(கர்ம வினை இல்லாதவன்) ராட்டினத்தில் ஏற வேண்டியதும் இல்லை. வேகம் பொறுக்காமல் வாந்தி எடுக்க வேண்டியதும் இல்லை!”
#சுற்றமும்நட்பும்