இறைவனுக்கு நன்றி!

எனக்கு உலகில் சிறந்த அழகு,உடல் வலிமை,படிப்பு,பட்டம் ,பதவி,கலை,ஞானம் அனைத்தையும் அவன் தந்திருந்தால் எதையும் என்னால் ரசித்திருக்க முடியாது!

மணிக்கணக்கில் கண்ணாடி முன் அமர்ந்து என்னையே ரசித்து என்னையே நான் வியந்து என் ஆக்கங்களை நானே படித்து என்வலிமையை நானே மெச்சி….. இப்படி உப்புச் சப்பில்லாமல் கழிந்திருக்கும்!

இறைவன் கருணையாளன்! இவை எதையும் எனக்குத் தரவில்லை!

அதனால்
பிறரின்
பாடல்களை ரசிக்கிறேன்!
கவிதைகளை அனுபவிக்கிறேன்!
பேச்சாற்றலை வியக்கிறேன்!
இசையைச் சுவைக்கிறேன்!
செல்வத்தை வசதியான வாழ்க்கையை வாழ்த்துகிறேன்!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என நுகர்ந்து அவனைத் தொழுது ” நீ தயாளன்! கருணைக் கடல்! உலகப் பொருட்கள் சாதனைகளில் சிக்காமல் காப்பாற்றினாய் ! ” என நன்றி கூறுகிறேன்!

Leave a comment