மனிதம் புகுந்த மனது!

மனிதம் ஏதோ ஒரு மனிதர் மூலம் நிகழ்வு மூலம் உங்களுள் புகுந்துவிடும்.அந்த விழிப்புணர்வு உங்களைச் சுற்றி ஒரு ஆன்மீக நறுமணத்தை உருவாக்கி பலப்பலப்பல நல்லோர்களை ஈர்க்கும்! அதன் பின் உங்கள் சிந்தனை உன்னதமான நிலைக்கு உயர்ந்துவிடும். உங்கள் எண்ணங்களும் செயல்களும் உங்களையே ஆச்சரியப்படுத்தும்! கடவுள் தடுத்தாட்க் கொள்வது என்பது இது தான்! கடவுள் சங்கு சக்ர கதா தாரியாக இப்போதைக்கு வரமாட்டான். ஆனால் அப்படியும் வருவான் காஞ்சிப் பெரியவர்,விவேகானந்தர்,பரமஹம்ஸர் … என மாறினால்! அதுவரை இறைவன் மனித உருவில் தடுத்தாட்க் கொள்வான்! இது கப்ஸா இல்ல ! சத்தியம்!

பட்டினத்தாருக்கு அவரது மகன் வடிவில் மெசேஜ் ” காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!”