ஆன்மீகம்-23

14 ஏப்ரல் 2018
வானவில்
=========
“நடைமுறை ஆன்மீகம்”

உடல் சார்ந்த வேறுபாடுகளைக் களைந்து ஆன்மீகத்தின் வாசற்படியில் நிற்கிறோம்!

நிலையாமையை நித்தமும் ஒருமுறையேனும் சிந்திக்கிறோம்!

மனம்,சித்தம் அடங்குவதே ஆன்மீகத்தின் நோக்கம் என்று முழுமையாக/அரைகுறையாக நம்புகிறோம்!

ஓரளவு மனித/உயிர் நேயம் பழகுகிறோம்!

சித்தத்தின் அலைகள் ஓய்வதே யோகம் எனப் பார்த்தோம்.

நடைமுறை ஆன்மீகம் என்பது இருவழிப்பாதை !

மதங்கள் சார்ந்த பாதை! மதங்கள் சாராத பாதை!

மதங்கள் மனமடங்கும் வழிகளை பாமரரும் பயன்பெறும் வழிபாட்டு முறையாக வகுத்தன!

மதம் சாராத வழிகளான தன்னொழுக்கம்,நேர்மை,பிற உயிர்க்கு மனம் உடல் சொல்லால் தீங்கிழைக்காமை,பிறரின் துன்பம் துடைத்தல்,…. இவற்றின் மூலமும் சித்த சுத்தி அடைந்து பிறப்பிறப்பற்ற பேரானந்த நிலை அடையலாம்!

மதம் சார்ந்த வழிமுறை-1
——————————————–
காலை எழும்போதும் மதியம் மாலை இரவு தூங்கும் முன்னும் இறைவனைச் சிந்தித்தல். இன்றைவிட நாம் நாளை நல்ல எண்ணங்கள் செயல்கள் சொற்கள் உள்ளவர்களாக மாறவேண்டும் என இறைவனை வேண்டுதல்.

மதம் சாராத வழிமுறை-1
——————————————-
நான் என்னுடையது என்ற எண்ணத்தைக் களைய முயல்தல்.
வள்ளுவர் சொல்கிறார் ” கண்ணா! ஸிம்பிள் வழி! நீ தேவர்களைவிட ஒருபடி மேலே போகனும்னா உன் ஈகோ ,பொஸஸிவ்னஸை விட்டுவிடு!”

யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

மனம்,சித்தம்,புத்தி,அஹங்காரம் என்று எப்படிச் சொன்னாலும் அனைத்தும் ஒன்றையே குறிக்கும் என சென்ற பதிவில் பார்த்தோம்.

மனம் தண்ணீர். சட்டி உடல். அடுப்பு உலக வாழ்வு. எரியும் விறகுகள் – பணம்,பட்டம்,பதவி,ஆணவம்,அகம்பாவம்,பிறரைப் பழித்தல்,அழித்தல்,காழ்ப்பு,…..

விறகு எரிவதால் நீராகிய மனம் கொதிக்கிறது.
ஒன்று நம் பயன்கருதா விருப்பு வெறுப்பற்ற செயல்கள்(கர்ம யோகம்) என்ற அரிசியைக் களைந்து உலையில் போட்டால் ஞானம் சோறாகி விறகும் சாம்பலாகி எல்லாம் அமைதியாகிவிடும். அது இறைநிலை. சஹஜ ஸமாதி. செயலாற்றி செயலின்றி இருத்தல். விவேகானந்தர் போன்ற நிலை.

மற்றொன்று ஆணவம்,பணம்,பட்டம்,பதவி…. போன்ற விறகை ஒன்றொன்றாகக் களைதல் .இது ஞான யோகம். நிர்விகல்ப சமாதி என்ற உலக தோற்றமாற்றங்களே இன்றி அமையும் நிலை. இரமணமகரிஷி

இதில் நமக்கு எது ஒப்புமோ அதைப் பின்பற்றி உய்வோம்!
வன்முறை களைவோம்! நன்முறை பயில்வோம்!
(#ஆன்மீகம்)

Leave a comment