தானம்,கொடை,ஈகை

ஆங்கிலக் கலாச்சாரம் கிழக்கிந்தியக் கம்பெனி வடிவில் விற்பனை லாபம் கொள்ளை லாபம் சுரண்டல் வரி வசூல் கிஸ்தி …. என்ற மந்திரங்களை 200 வருடங்கள் ஓதிச் சென்றதன் பலன் நாம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காத்த பண்பாடு பல்லிளித்துவிட்டது. மீள முடியவில்லை.

அது நம் குணமாகவே மாறிவிட்டது. செய்யும் கொஞ்சநஞ்ச தானமும் பெயர் புகழுக்காகவோ புண்ணியம் வேண்டியோ பாவம் தொலைக்கவோ செய்யப்படுகிறது.

எல்லா உயிரிலும் இறைவனிருக்கிறான்.

எல்லா உயிருக்கும் உணவு இயங்கு சக்தி.

அதை எந்த நோக்கமும் இன்றி பகிரவேண்டும்.

சொர்க்கத்தில் இடம் பிடிக்க பாவத்தைக் கழுவ அன்னதானமாகச் செய்யும் நாம் அனைவரும் பிச்சைக்காரர்களே!

பயன்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

#தானம்கொடைஈகை

Leave a comment