இறைவா ! இவற்றைத் தராதே!

அளவற்ற கல்வி,அதனால் வரும் அகம்பாவம்!
அளவற்ற புலமை,அதனால் வரும்
செருக்கு!
உயர்ந்த பதவி, அதனால் வரும்
ஆணவம்!
அளவற்ற ஆற்றல், அதனால் வரும்
வன்மம்!
அளவற்ற செல்வம்,அதனால் தரும்
கொடை!
அளவற்ற கொடை,அதனால் வரும்
சொர்க்கம்!
நீண்டகால சொர்க்கம்,அதனால் வரும்
பிறப்பு!
அளவற்ற பிறவி,அதனால் வரும்
வினைகள்!
……..
நிலையாமை உணர்த்து!
நல்வழியில் நிறுத்து!

ஆன்மீகம்-26

வானவில்
========
5 May 2018

பாவ புண்ணியங்கள்
===================
இதை ஒரு சூத்திரமாக எளிதில் புரிந்து கொள்ளலாம்.

செயல் = பாவ புண்ணியம் இல்லை

செயல்+ஆசை= கர்மவினை
செயல்+கோபம்= கர்மவினை

செயல்+ஆசை+நல்ல நோக்கம்+சுயநலம் = புண்ணியம் = நல்வினை
செயல்+கோபம்+நல்ல நோக்கம்+சுயநலம்= புண்ணியம் = நல்வினை

செயல்+ஆசை+தீய நோக்கம்+சுயநலம் = பாவம் = தீவினை
செயல்+கோபம்+தீய நோக்கம்+சுயநலம் = பாவம்= தீவினை

புண்ணியங்கள் மட்டும் —>> சொர்க்கம்
பாவங்கள் மட்டும்  —>> நரகம்
பாவ,புண்ணியங்கள் —>> பூவுலக வாழ்க்கை

புண்ணியங்கள்—>>சொர்க்கம்–>>பூவுலக வாழ்க்கை ; மறுபடி மொதல்லருந்து!
பாவங்கள் —->>நரகம்—>>பூவுலக வாழ்க்கை;மறுபடி மொதல்லருந்து

செயல்+ஆசை+நல்ல நோக்கம்+பொதுநலம் = பாவபுண்ணியம் இல்லை –> பிறவியில்லை
செயல்+கோபம்+நல்ல நோக்கம்+பொதுநலம்= பாவபுண்ணியம் இல்லை—>> பிறவியில்லை

தன்நலம் கருதாது பலனை எதிர்பார்க்காது ஆசை,கோபம் பொருந்திய செயலானாலும் பாவபுண்ணிய வகைப்பாட்டில் அந்த செயல் அடங்காது. அதனால் பிறப்பிறப்பில்லா நிலை அடையலாம்!

நிறைய கருத்துக்களை சுருக்கமாகச் சொன்னால் குழப்பமாக இருக்கும். ஆனால் சூத்திரங்கள் உண்மை. நிரூபிக்கப் பட்டவை!
#ஆன்மீகம்
(தொடர்வோம்)