இறைவா ! இவற்றைத் தராதே!

அளவற்ற கல்வி,அதனால் வரும் அகம்பாவம்!
அளவற்ற புலமை,அதனால் வரும்
செருக்கு!
உயர்ந்த பதவி, அதனால் வரும்
ஆணவம்!
அளவற்ற ஆற்றல், அதனால் வரும்
வன்மம்!
அளவற்ற செல்வம்,அதனால் தரும்
கொடை!
அளவற்ற கொடை,அதனால் வரும்
சொர்க்கம்!
நீண்டகால சொர்க்கம்,அதனால் வரும்
பிறப்பு!
அளவற்ற பிறவி,அதனால் வரும்
வினைகள்!
……..
நிலையாமை உணர்த்து!
நல்வழியில் நிறுத்து!