ஆங்கிலேயன் வைத்த அக்கினிக் குஞ்சு!

ஆங்கிலேயன் மாய வலை விரித்தது  முதலில் அந்தணர்களுக்கே!
1.சமஸ்க்ருத கல்வி ஒழித்தான்.
2.பாம்பாட்டிகள் என பரப்ப புத்தகங்கள் வெளியிட்டான்.
3.அந்தணர் வேதம் கற்பது குறைந்தது.
4. வேத சடங்கு வேள்விகள் வழிபாடு குறைந்தது
5. அந்தணர் விவசாய சொத்துக்கள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு தவிக்க வைத்தான்
6. பிடிபட்ட காட்டு யானை பசி தாகத்தால் சொன்னபடி கேட்ப்பது போல அந்தணர்கள் ஆங்கிலக் கல்வி கற்றனர்.
7. வேதம், அந்தணர் சரிந்தனர்
8. பணம் பட்டம் ஆசையில் உயர்வு தாழ்வு கற்பித்தான்.
9. அந்தணர்களை முற்றிலும் தனிப்படுத்த ஆரிய திராவிட கற்பனைக் கதையை உருவாக்கி பரப்பினான். மக்கள் சமஸ்க்ருதம் மறந்ததால் உண்மை அறியாமல் திரித்துக் கூறப்பட்ட ஆங்கில நூல்களை வேதவாக்காக நம்பினர்.
10.வேதங்களை மொழி பெயர்ப்பதாக தாறுமாறாக மொழி பெயர்ப்பு செய்தான்.
11. இதற்கிடையில் வேதநெறியில் வாழ்ந்து எல்லா உயிரும் ஒன்று என்ற சிந்தனையுடன் இருந்த அந்தணர்கள் பட்டம் பதவி வந்ததும் தாங்கள் மற்றவரைவிட உயர்ந்தவர்கள் என நம்பத் தொடங்கினார்கள்.
12. சாதிக் கொடுமைகள் தொடங்கின. ஆரிய திராவிட பிளவு மேலும் சாதிகளைக் கூறு போட்டது
13. வேதவாழ்வு அழிந்தது. பகைமை கொழுந்துவிட்டு எரிகிறது
14. அரசியல் வாதி அதில் மானமின்றி குளிர்காய்கிறான்.
15. நாம் பார்ப்பான் ஒழிக என்கிறோம். பிரிட்டிஷ் காரன் போனதும் வேதவாழ்விற்கு அந்தணர்கள் மாறி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்க வேண்டும். ஆனால் பணம் பட்டம் அதிகாரம் அவ்வளவு எளிதில் விட மனம் வராது.
16. இதற்கிடையில் மொழிவாரி மாநிலம் இந்து முஸ்லீம் ப்ரச்சனை….. இப்படி பல சேர்ந்து கொண்டன.
17. நாலாம் வர்ணத்தை கோவிலில் விடாததைப் போன்ற அறிவற்ற செயல் எதுவும் இல்லை. கோவில்கள் உருவானதே அனைத்து இந்துக்களுக்கும்! அதிலும் அந்தணர்களுக்கு கோவில் போக வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் வீட்டில் மூன்று கால வழிபாடு செய்தாலே சித்தராக யோகியாக ஞானியாக வாழலாம்! அவ்வளவு கடுமையாக வழிபாடு செய்ய இயலாதவர்களுக்காகவே கோவில்கள் உருவாகின.இறை ஆற்றல் அனைவரையும் அடையவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே . இதில் வேதம் கற்ற அந்தணர்கள் பணி முறையாக பூஜை செய்து அந்த கோவில்கள் அதிர்வுகளைத் தக்க வைக்கும் பொதுப்பணியே.
மற்றவரை அடக்கி ஆளவோ கோவில்களை உரிமை கொண்டாடவோ மற்றவரை உள்ளே வராமல் தடுக்கவோ இல்லை.
18. இந்த ஆலய அனுமதி மறுப்பு எந்த அடிப்படையில் என்பதே இதுவரை எனக்கு விளங்கவில்லை!
19. ஞான சம்பந்தர், ராமானுஜர்,……. இப்படி நாடெங்கிலும் ஆலய அனுமதி மறுப்பை எதிர்த்து நடவடிக்கை எடுத்தார்கள்.
20. திரு.ஈ.வெ.ரா. நாயக்கரும் நல்லவரே. சம்பந்தர்,இராமானுஜர் ,….. சொல்லியும் திருந்தாததால் அவர் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சொன்ன விதம் கடுமை. சொன்ன சொற்கள் கடுமை. கருத்து சரியே.
இதையும் யாரும் கேட்கவில்லை. அடுத்து வந்தது இறைமறுப்பு.
இறைமறுப்பு கலந்ததும் அவர் சொல்ல வந்த செய்தி சாதி அவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட அந்தண இந்து மத எதிர்ப்பாய் தடம் புரண்டது.
21. இந்துமத கடவுள் மட்டும் இல்லை என்ற வாதம் சிறுபிள்ளை கூட ஏற்காது. அதனால் இன்றும் சாதியின் பெயரில் கொடுமை தொடர்கிறது. மேலும் தொடரும். ஏனென்றால் அதில் அரசியலின் அச்சு இணைந்து உள்ளது.
22. இதில் திரு.ஈ.வெ.ரா.வின் பிரிட்டிஷ் ஆதரிப்பு சுய ஒழுக்கக் குறைவு இந்துமத கடவுள்களை மட்டும் எதிர்த்தது அவரது உண்மையான கருத்துக்களை நீர்க்கச் செய்தது. இந்நிலையில் வழிபாடு கூடாது என்றவருக்கு அவரது கொழுந்துகள் சிலைவைத்து மாலையிட்டு பூஜை செய்தது அவரது கொள்கைகளை தெருவில் இட்டு உடைத்தது!
23. இன்றும் சாதிக் கொடுமை நடக்கிறது. அந்தண எதிர்ப்பு ஒரு நகைச்சுவையாக கொள்ளப்படுகிறது. அந்தணர்கள் அதை பெரிது படுத்துவதில்லை.நல்ல அந்தணர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாகிவிட்டது.

ஆங்கிலேயன் வைத்த வெறுப்பு என்ற அக்கினிக் குஞ்சு ! வெந்து தணிந்தது இந்தியா!
எய்த ஆங்கிலேயன் இருக்க அந்தணர்களை நோகிறோம்!
காஞ்சிப் பெரியவர் அருள்மொழியால் பலப்பல அந்தணர்கள் வேதவாழ்விற்கு திரும்பி வருகிறார்கள்.
வேதம் செழிக்கும். சாதிகள் தொடரும். உயர்வு தாழ்வு அழியும்.
இந்தியா தங்கத் தீபகற்பமாய் மீண்டும் ஒளிரும். இதற்கு சனாதனம் போதிக்கும் அறவாழ்க்கை வேண்டும்.  அதற்கு இந்துமதம் காப்பாற்றப்பட வேண்டும்!