பசித்தவன் உணவைத் தேடுகிறான்!
களைத்தவன் உறக்கம் தேடுகிறான்!
இதை அடைந்தவன் காமம் தேடுகிறான்!
காமம் தீர்ந்தவன் கலையைத் தேடுகிறான்!
கலையில் சலித்தவன் கருவிகளைத் தேடுகிறான்!
கண்டுபிடிப்பில் சலித்தவன் தன்னைத் தேடுகிறான்!
தன்னைத் தேடுபவன் கடவுளைக் காண்கிறான்!
கடவுளைத் தேடுபவன் தன்னைக் காண்கிறான்!

தன்னைக் கண்டவன் தயையில் நிலைக்கிறான்!
கடவுளைக் கண்டவன் கடவுளாகிறான்!