நாம் கடவுள்!

த்வைதம்,விசிஷ்டாத்வைதம் மனம் என்ற ஒன்று தனித்து உணரப்படும்போது ஏற்படும் காட்சிப் பிழைகள். அத்வைதம் மனம் அழிந்த உண்மை நிலையில் நாம் கடவுள் என உணர்தல்.
தண்ணீரில் முக்கிய குச்சி வளைந்ததாகத் தெரிவதும் குட்டையாகத் தெரிவதைப் போன்ற காட்சிப்பிழை! வெளியில் எடுத்தால் குச்சியின் நீளம் ஒரு இம்மி கூட மாறுவதில்லை. தண்ணீரின் ஒளி முறிவு எண் refractive index காற்றைவிட அதிகமாவதால் இந்த காட்சிப்பிழை ஏற்படுகிறது. மனம் அழியும் வரை இறைவன்-பக்தன் என இரட்டை நிலை! மனம் அழிந்தால் இறைவனே மிச்சம். இறைவன்-பக்தன் கிடையாது. மனம் நம் எண்ணங்களின் கோர்வை. எண்ணங்கள் ஆசை வெறுப்பால் வருபவை. ஆசை தொலைந்தால் மனம் இல்லை. நாம் கடவுள் என்ற நிலை. பிறப்பிறப்பு இல்லை.

குச்சி என் குரு!

நீச்சல் குளத்தில் ஒரு நீளமான குச்சியை வைத்தால் அது வளைந்தும் குட்டையாகவும் தெரியும். அப்படியே தண்ணீரை வற்றச் செய்தால் குச்சி அதே அளவு நீளமாகவும் வளைவின்றி நேராகவும் இருப்பதைக் காணலாம். ரமணர்,காஞ்சிப் பெரியவர்,….போன்ற மகான்கள் குச்சியை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு குச்சி மாறுபடாததை உணர்ந்து மறுபடி நீரில் வைத்துவிடுகிறார்கள். அதாவது உலகியல் வாழ்வில் நம்மைப் போல் உடல் தாங்கி உண்டு உறங்கி இருந்தாலும் குச்சி வளைதல் மாயை என உணர்ந்து சாட்சி ரூபமாக வாழ்வை முடிக்கிறார்கள். அதனால் குளத்தில் அதாவது உலகியல் ரீதியில் வரும் இன்பதுன்ப அலைகளைப் பொருட்ப்படுத்துவதில்லை.
தியானத்தில் குச்சியை வெளியே எடுப்பதைப்போல மனதிலிருந்து தங்களை விடுவித்து ஆன்மாவில் ஒன்றி இருப்பதை சமாதி என்கிறோம். அதனால் தியானம் கலைத்தவுடன் பற்றற்று வாழ முடிகிறது. சில ஞானிகள் அவதாரங்கள் மட்டும் எப்போதும் மனதற்ற நிலையில் இருக்கிறார்கள். ரமணர்,பெரியவர்,விவேகானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள்…….
உடல்- நீச்சல் குளம்
நீர்-மனம்
குச்சி-பரமாத்மா
குச்சி வளைதல் – ஜீவாத்மா
குச்சி குட்டையாதல்,வளைதல்- ஜீவாத்மா தன்னை சக்தி குன்றிய ஆத்மாவாக பிழையாக உணர்தல்

“எலி”வேட்டட் திங்கிங்!-2

“எலி”வேட்டட் திங்கிங்!-2
=====================
கடவுளும் நம்மை பிறப்பிறப்பிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தாலும் உலக சுகங்களை மட்டும் நாடி ஓடி ஆடி(நீச்சல் குள பாதுகாப்பு வலை) களைத்து நிலையாமை உணர்தல் என்ற ஓட்டை வழி தப்பிக்கத் தெரியாமலும் கடவுளே அவதாரம் எடுத்து வந்து தர்மவழி என்ற கதவைத் திறந்து வழிகாட்டினாலும் அழியும் பொருள் தேடித் திரிந்த களைப்பில் என்ன ஆனாலும் பரவாயில்லை என இறை தேடலைக் கைவிட்டு கர்மவினையின் காலடியில் படுத்துவிடுகிறோம். அது நம்மை மிதி மிதியென மிதிக்கிறது!